மகா சிவராத்திரி விரதத்தை இந்து ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும், ஊக்கப்படுத்தலையும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பணித்துள்ளார்.
சிவராத்திரி விரதத்தை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கப்படுத்துமாறும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அதன்போது சைவச் சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. மகா சிவராத்திரி விரதத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.