யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களுக்கும் யாழ்.பல்கலைகழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறியிப்பிடத்தக்கது.