Friday, June 2, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

இனப்படுகொலைக்கான குற்றஒப்புதல் வாக்கு மூலத்தை அளித்தார் கேட்டாபய

போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மாவை பகிரங்க வலியுறுத்தல்

News Team by News Team
January 16, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
இனப்படுகொலைக்கான குற்றஒப்புதல் வாக்கு மூலத்தை அளித்தார் கேட்டாபய
0
SHARES
54
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கையில் இனப்படு கொலை இடம்பெற்றுள்ளது என்பதற்கான குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ளார் இது சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே தான் என தெரிவித்தார்.

அண்மையில் பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும்
செயல்பட முடியும் என ஐனாதிபதி தெரிவித்துள்ளமை தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளார்
இது ஒரு கொலை அச்சுறுத்தலே தான் அம்பாறை மாவட்டம் உஹனையில் கடந்த 9 ஆம் திகதி நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பர்னன்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின்
போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, ‘பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயல்பட முடியும்’ எனப் போர் முழக்கம் செய்துள்ளார்.

பத்திரிகைகளில் இச்செய்திகள் வெளிவந்தபோது நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் 2009 வரையில் போரின் காலத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை மட்டுமல்ல அதற்கு யார் பொறுப்பாக இருந்தார் என்பதும் இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை அரசு
பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டையும் நிறுவியுள்ளது.

அதற்கு அப்பால் ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல இலங்கை நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கும் இராணுவமயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும், இப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேசமக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களையும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தை, இனப் படுகொலை
அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனாதிபதி ‘நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொன்றேன்’ என்றால் போர்முனையில் இருந்திருக்கிறேன் என்பது தானே.

பிரபாகரனையும் இழுத்துச் சென்று சுட்டேன் என்றால் உயிருடன் நந்திக் கடல் போர்முனையில் பிடிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றிலல்லவா நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லாமல்
சுட்டுக் கொன்றேன் என்றால் அது போர்க்குற்றம் தானே. இப்படித்தான் பல ஆயிரம் மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா? நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா? நான் அறிந்தவரையில் பிரபாகரன் களத்தில் போராடியிருப்பாரே தவிர சரணடைந்துவிடாத சுபாவம் கொண்டவர்.

அவரது மகன் பாலச்சந்திரன் அப் போர்க்களத்தின் நடுவே எவ்வளவு அப்பாவித்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதை உலகம் அறியும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூவான் வெலிசாயாவில் பதவி ஏற்பு
நிகழ்வில் பதவி ஏற்றார். அச்செய்கையானது நாட்டை ஆண்ட எல்லாள மன்னனைத் துட்டகாமினி போரில் தோற்கடிக்கப்படான் என்பதை நினைவூட்டுகிறது அது போல தான் பிரபாகரனை கொன்று வென்றென் என்று தானே கூறுகிறார்.

ஆனால் போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் (சமாதி) அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி. துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன், வரலாறு கூறும், மகா வம்சத்தில் ‘சிங்கள’ என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறில்லாமல் ‘நந்திக்கடலில் போரில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன்’ என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர்களை, பாராளுமன்ற ஜனநாயகத்தை, தமிழ்த் தேச மக்களை இழிவுபடுத்தி நாட்டின் தலைமைத்துவப் பண்புகளை இழந்து நாகரிகத்தை மண்ணில் புதைக்கலாமா? ஜனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்கு
மூலமே தான் என்றுள்ளது.

Tags: இனப்படுகொலைகோட்டாபயஜனாதிபதிஜெனிவவாமாவைமுள்ளிவாய்க்கால்
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist