சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 பாராளுமன்றம் மணிக்கு கூடவுள்ளது.
இந்த வாரத்திற்கான பாராளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இதுவரையில், அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த உள்ளிட்டோர், நாடாளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.