கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி குளிரூட்டி வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை நகரப் பகுதியில் நேற்று மாலை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக 9 கால்நடைகளை குளிரூட்டி வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை நகரப் பகுதியில் வைத்து வாகனத்தை பளை பொலிஸார் சோதனையிட்டபோது அவற்றைக் கையப்பற்றியதுடன் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.