இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இன்று இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நியைத்தை வந்தடைந்த அவருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
இன்று அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.
நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் முற்பகல் 11.30க்கு ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ள வணிக மற்றும் முதலீட்டு சம்மேளனத்திலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
நண்பகல் 12.30 க்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் கலந்து கொள்வார். மேலும் நாவல கிரிமண்டல மாவத்தையில் உயர்தரத்திலான விளையாட்டு துறைசார் மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.