சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடுவதால் அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில், ஹோட்டல் உணவை வாங்கி வந்து வீட்டில் சாப்பிடுவோம். அப்போது மீதம் இருக்கும் உணவை வைத்திருந்து சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது.
ஏன் என்றால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும். நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. டீ மற்றும் காபியை மீண்டும் மீண்டும் சூடாக்கி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி-டீயை மறுபடியும் சூடேற்றினால், அதன் சுவை மாறிவிடும்.
கண்டிப்பாக கீரை வகைகளை, மறுமுறை சூடு படுத்தி உண்ணக்கூடாது. கீரைகளில் “நைட்ரேட்ஸ்” உள்ளது.
பல மணி நேரம் கழித்து, மறுபடியும் கீரையை சூடேற்றுவதால், அதில் உள்ள நைட்ரேட்ஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனமாக மாறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால், கீரை வகைகளை தேவைக்கு ஏற்ப சமைத்து, உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.
அதே போன்று, பருப்பு மற்றும் தானியங்களை மீண்டும் மீண்டும் சூடாக்குவதால் அதில் உள்ள புரதச்சத்து அழிந்துவிடும். காளானை மறுமுறை சூடேற்றி சாப்பிட கூடாது. பச்சைக் காளான்களை நறுக்கும்போதே, அதில் உள்ள புரதச்சத்து அழியத் தொடங்கிவிடும். காளானில் இருக்கும் புரதச்சத்தை முழுமையாகப் பெற, உடனடியாக சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதே போன்று, சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளை சமைத்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்து, மீண்டும் அதை சூடேற்றி சாப்பிடுவது மிகவும் தவறு. புரதம் அதிகம் உள்ள மாமிச வகைகளை ஒருமுறைக்கு மேல் சூடேற்றுவதால், வயிற்றில் செரிமான பிரச்சனைகள், புட் பாய்சனிங் போன்றவை ஏற்படலாம்.எந்த உணவுகளை எல்லாம் சூடுபடுத்தி மீண்டும் சாப்பிட கூடாது என தெரியுமா..?