வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் 30/01/2021 அன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே போட்டியிட வேண்டும் என முன்மொழிந்தபோது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
எனினும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கட்சியின் செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் உறுதிப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.