யாழ்.பருத்துறை – திக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் 19.02.2021 இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிகரன் (வயது -30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.