ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கான ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயரை மாற்றியுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று வரும் அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் புதிய பெயருடன் களம் இறங்க உள்ளது.
இது தொடர்பாக, அந்த அணியின் இணை உரிமையாளர் மொஹித் பர்மன் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இனிமேல் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கப்படும். அணிக்கு புதிய தோற்றம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.