கிளிநொச்சி உமையாள்புரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின்போதே ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கிடையிலான முறுகல் நிலையின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிந்ததாக தெரிய வருகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.