மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெவிளியாமடு காத்தார் அல்லிச்சேனை பகுதியில் மேச்சல் தரையில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மகிழடித்தீவு தெற்கைசேர்ந்த
சொர்ணலிங்ம்,குருகுலசிங்கம், மகேஸ்வரலிங்கம், நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த யோகநாதன் ஆகிய நான்கு களையும் இன்று மங்களகம பொலிஸார் கைதுசெய்து சென்று சரீரப்பிணையில் விடுதலை செய்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அம்பாறை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்குமுன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மயிலத்தமடுவில் மாடுமேய்க்கச் சென்ற ஏழுபேரை அங்குள்ள பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தி மங்களகம பொலிஸாரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் கொண்டு சென்று பிணையில் விடுவித்து தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல்தரைகளை அத்துமீறி அபகரிப்பதும் சேனைப்பயிர்செய்கை, முந்திரிசெய்கை என்றபோர்வையில் திட்டமிட்ட குடியேற்றம் செய்வதற்காக நேரடியாக பண்ணையாளர்களை குண்டர்களை கொண்டு அச்சுறுத்துவதும் பொலிஸாரைகொண்டு கைதுசெய்வதும் தொடர்கதையாக உள்ளதாக மட்டக்களப்பு மாடுவளர்கும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.