யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் ஒரு வீட்டை அடித்து நொருக்கிய வன்முறைக் கும் பல் வாகனங்களிற்கும் தீ வைத் து விட்டுத் தப்பிச் சென்றது.
கொக்குவில் கிழக்கு நந்தா வில் அம்மன் கோவிலை அண் டிய பகுதியில் உள்ள ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையம் இயங்கும் வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்த வன்முறைக் கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வாள் கள், கம்புகள், கொட்டன்கள் சகி தம் புகுந்த குழுவினர் முதலில் வீட்டை அடித்து நொருக்கினர். வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த காரையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தி யதில் இரு மோட்டார் சைக்கிள்களும் முற் றாக எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.