கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.
சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார். நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொரோனா நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்