கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 09, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது