சென்னை விருகம்பாக்கம் சாய்பாபா காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக அங்கு வசிப்பவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் சிலர் வாடிக்கையாளர்கள் போன்று அந்த வீட்டிற்கு சென்றனர். அப்பொழுது தான் அங்கு மாடல் அழகிகள், இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இளம் பெண்கள், நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இயக்குநர் ஒருவரின் மனைவி காந்திமதி என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த மாடல் அழகியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
விசாரணையில் காந்திமதி கூறியதாவது,
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு என் கணவரை பார்க்க வரும் இளம் பெண்கள், மாடல் அழகிகள், வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நடிகைகளிடம் நைசாகப் பேசி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தேன் என்றார்.
பெரிய ஹீரோக்களுடன் உங்களை நடிக்க வைக்கிறேன் என்று கூறி அவர் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார். மேலும் இளம் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை தொழில் அதிபர்களுக்கு அனுப்பி பேரம் பேசி பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார் காந்திமதி.
பொலிஸார் காந்திமதியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இயக்குநர் ஒருவரின் மனைவி இப்படி பாலியல் தொழில் செய்து கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காந்திமதியிடம் சிக்கிய அந்த நடிகைகள் யாராக இருக்கும் என்று பேசப்படுகிறது.