பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை வேடத்திற்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவர் அந்த கதாபாத்திரத்திற்காக எடுத்த முயற்சிகள் சீரியலில் நன்றாக தெரியும்.
ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு சென்றுள்ள அவர் வருங்கால கணவருடன் சண்டை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் கடைசியாக நேற்று இரவு கூட தனது இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
சிரித்தபடி எவ்வளவு அழகாக புகைப்படங்கள் எடுத்துள்ளார், அதற்குள் என்ன நடந்தது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.