அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை தினமும் மாலை யானைக் கூட்டம் ஆக்கிரமிப்புச் செய்து வருகின்றது. திடீரென அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் யானைக் கூட்டம் சொறிக்கல்முனை – வீரமுனை பகுதியின் ஊடாக செல்லும் வீதியின் ஒரு மருங்கினால் செல்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாறான 7 யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கிச் செல்கின்றன. தினமும் அப்பகுதிக்கு வரும் இந்த யானைக் கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருவதுடன் இவ்வாறு வயல் வெளிகளை நோக்கிச் செல்லும் யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
மேலும் இப் பிரதேசத்தில் தினந்தோறும் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனால் காட்டில் உள்ள யானைகள் வெளிவந்த நிலையில் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த 42 வயதான விவசாயி ஒருவர் திங்கட்கிழமை (22) இரவு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ