திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். விடுதியில் இருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (28) உத்தரவிட்டார்.
கல்கமுவ, தம்புள்ளை, மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்த 31, 34, மற்றும் 36 வயதான மூன்று பெண்களும் ஆண் ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் எதிரே மஜாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி நடத்துவதாக திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.