யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்து வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் ஹோட்டலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் மற்றும் நிலத்திற்கு பதிக்கப்படும் மாபிள்கள் என பல பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தது.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாவற்குழி – புதிய குடியிருப்பு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர்.
மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் இருக்கின்ற இடம் தொடர்பாக இளைஞர்கள் சிலருக்கு தகவல் கிடைத்த நிலையில் உரிமையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் கைதுவழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்ததுடன் பொருட்களையும் மீட்டுள்ளனர்.