மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய சின்னப் புல்லுமலை கிராமத்தில் பாம்பு தீண்டியதால்
2 மாதங்களான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் திருமணமான தம்பதியினருக்கு இக்குழந்தை முதல் பிரசவம் என உறவினர்கள் தெரிவித்தனர். வழமைபோன்று தாய்ப் பாலருந்திய நிலையில் உறங்கிய குழந்தையை அதிகாலையில் தாய் அணைத்தபோது அக்குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.
உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்போது குழந்தை ஏற்கெனவே மரணித்து விட்டிருந்ததாக வைத்தியசாயைலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உள்ளங்கையில் அரவம் தீண்டியிருப்பது உடற்கூராய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சிசுவின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.