இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவுகள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் கொவிட்-19 நோய்க்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு நமது மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென அவர் இந்த சந்தர்ப்பத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொரோனா பெரு நோய் காரணமாக எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு மத்தியிலும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், மக்கள் இடையிலான தொடர்புகள் ஆகியவை கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு வழிசமைத்த இலங்கை மற்றும் இந்திய தலைவர்கள் மட்டத்திலான கிரமமான தொடர்பாடல்களின் தொடர்ச்சியாக இந்த பாராட்டுக் கடிதம் அமைந்துள்ளது.