Friday, March 31, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

பிரபாகரனுக்கு முதலாவது பாடம் படிப்பித்தவர் உங்கள் தந்தையே; பாடகி யொஹானிக்கு சரத் பொன்சேகா

santhanes by santhanes
October 7, 2021
in இலங்கை
Reading Time: 1 min read
0 0
0
பிரபாகரனுக்கு முதலாவது பாடம் படிப்பித்தவர் உங்கள் தந்தையே; பாடகி யொஹானிக்கு சரத் பொன்சேகா
0
SHARES
896
VIEWS
FacebookWhatsappTwitterEmail

சிங்கள பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றை கைப்பற்றி பிரபாகரனிற்கு முதலாவது பாடத்தை கற்பித்ததாக முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலின் மூலம் திடீரென புகழடைந்த சிங்கள பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன டி சில்வா, இலங்கை இராணுவத்தின் உயதிகாரியாவார். மேஜர் ஜெனரல் தரத்தில் ஓய்வுபெற்றார்.

முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யொஹானிக்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அந்த வாழ்த்தில் யொஹானியின் தந்தை பிரசன்ன டி சில்வா பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் தந்தை பிரசன்ன டி சில்வாவை, மாவிலாற்றை மீட்பதற்காக வவுனியாவிலிருந்து கல்லாறிற்கு அழைத்தேன்.  அந்த கட்டளையை தொடர்ந்து, விசேட படையணியுடன், பீரங்கி, விமானப்படையின் உதவியுடன் 2006 ஓகஸ்ட் 10ஆம் திகதி மாவிலாற்றை உங்கள் தந்தை விடுவித்தார். நீரை ஒரு போர்க்காரணியாக புலிப் பயங்கரவாதிகள் பாவித்தார்கள்.

மனிதாபிமான காரணங்களை போர்க்காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடம் பிரபாகரனிற்கு கற்பிக்கப்பட்டது.  மாவிலாறுக்கு பின்னர் கேணல் பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி, வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தில் திருமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறப்புப் படைகளை வழிநடத்தினார். கிழக்கு நடவடிக்கையின் போது தொப்பிக்கல நடவடிக்கையில் மட்டும் உங்கள் தந்தைக்கு சிறிது ஓய்வு கொடுத்தேன்.

இறுதிப் போரில் 55 மற்றும் 59 வது படையணி தளபதியாக தந்திரோபாயத்திற்கான வீரம் மற்றும் தலைமையை வழங்கினார் என குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, அசை மேடையில் புகழடைந்து தந்தையை போல தாய்நாட்டிற்கு புகழ் சேர்க்க வேண்டுமென வாழ்த்தியுள்ளார். 

Tags: சரத் பொன்சேகாபாடகி யொஹானிபிரபாகரன்
santhanes

santhanes

Recent Posts

  • யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழும் கடற்படை
  • IMF ஆதரவுடன் நான்கு ஆண்டுகளில் நாடு ஸ்தீரமடையும்
  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist