Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

மக்களை அச்சுறுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம்; விக்னேஸ்வரன்

News Team by News Team
February 13, 2021
in இலங்கை
Reading Time: 1 min read
0 0
0
மக்களை அச்சுறுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம்; விக்னேஸ்வரன்
0
SHARES
10
VIEWS
FacebookWhatsappTwitterEmail

எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சி.வி.விக்னேஸ்வரனை, யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, சி.வி.விக்னேஸ்வரன்  கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சியில் இருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை எனவும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத்தான் ஏதோ குற்றஞ்சாட்டிக் கைதுசெய்துகொண்டு போனதாகவும் அவர்களின் உறவினர்கள் கூறியிருந்தார்கள்.

இதுதொடர்பாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) நான் பேசியிருந்தேன். அவர்கள் கூறும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கின்றது. கைதுசெய்யப்பட்டவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும் புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளார்கள்.

ஆனால், இவற்றைப் பார்க்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு ஆக்கினைகளை, பிரச்சினைகளை, தொந்தரவுகளைக் கொடுக்கின்றார்கள்.

எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவிச் செய்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும்.

எனவே, இதுதொடர்பாக நாங்கள் வழக்குகள் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இந்த உறவினர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என ஆராய்த்து வருகின்றோம். வெகு விரைவில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: அச்சுறுதல்பயங்கரவாத தடைச்சட்டம்விக்னேஸ்வரன்
News Team

News Team

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist