முன்னாள் சபாநாயகர் டபில்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார 14/02/2021 அன்று மாலை காலமானார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முதன் முதலில் 1977ஆம் ஆண்டு ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தார்.
இறுதியாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 2004 – 2010 ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலப் பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராக கடமையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2010 – 2015 காலப் பகுதியில் சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றியிருந்தார்.
ஒரு சட்டத்தரணியான அவர், பல்வேறு புத்தகங்கள் மற்றும் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.