யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஓட்டோ சாரதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குருநகர் தனியார் பேருந்து நடத்துனருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவரது குடும்ப உறுப்பினரான, ஓட்டோ சாரதியே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனியார் பேருந்து நடத்துனர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களிற்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடத்துனரின் மனைவி, மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது மகன் முச்சக்கர வண்டி சாரதியாவார். அவர்களுடன் தொடர்பிலிருந்த 20 குடும்பங்கள் நேற்றிரவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.