யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையே குளிரூட்டப்பட்ட uயில் சேவைகள் இன்று முதல் (12.02.2021) இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்கிஸையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் ரயில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும்.
இந்தச் சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் நேற்று முதல் இந்தச் சேவையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணிகள் ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாவும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாவும் கட்டணம் அறவிப்படும் என்றார்.