யாழ்.கோண்டாவில் இ.போ.ச சாலைக்கு பின்பாக நேற்றய தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு குழு தாக்குதலில் ஒருவருடைய கை துண்டிக்கப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

