தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் ஒளிப்படங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி இருந்த போராட்டக்காரர்கள் கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் தாங்கியிருந்தனர்.
எதிர்வரும் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.