யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வல்லைப் பாலப்பகுதில் பிக்கப் ரக வாகனம் ஒன்று சில்லு காற்று போன நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் சாரதி, அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனமே பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.