வட மாகாண பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று வடக்கு மற்றும் தெற்கில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நெருக்கமான நட்புறவுகளை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாகும். சிங்கள மொழியை கற்றுக் கொள்வதில் வடக்கு மாணவர்களிடம் பெரும் ஆவலைக் காண முடிகின்றது.
வடக்கில் ஆசிரியர்கள் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும், கல்வியமைச்சின் வளங்களை வடக்கு, கிழக்கு, தெற்கு என எந்தவித பாரபட்சமுமின்றி அனைத்து பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.