Saturday, September 23, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home புலம்பெயர்

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகத்தின் மற்றொரு தீர்ப்பு

santhanes by santhanes
February 20, 2021
in புலம்பெயர், முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகத்தின் மற்றொரு தீர்ப்பு
0
SHARES
46
VIEWS
FacebookWhatsappTwitterEmail

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கோரிய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது.

ஆணையகத்தின் இரண்டாம் கட்டத் தீர்ப்பு 18.02.2021 அன்று வெளிவந்த நிலையில் பிரித்தானியா கோரிய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் முதல் தீர்ப்பில், பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உட்துறை அமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என கடந்த ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம் திகதி ஆணையகம் தெரிவித்திருந்தது.

முதல் தீர்ப்பு தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையகத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உட்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்தது.

இந்நிலையில், தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையகத்திடம் பிரித்தானிய அரச தரப்புக் கோரியிருந்ததோடு, இலங்கையில் புதிய மாற்ற சூழலில் மேலும் புதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது. இவற்றினடிப்படையில் ஆராய்ந்து முடிவை எடுக்க 90 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில், நேற்று வெளிவந்த ஆணையகத்தின் இரண்டாம் கட்டத் தீர்ப்பில், பிரித்தானியா கோரிய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரித்தானிய உட்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்விதமான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற வல்லுநர்களின் அறிக்கைள்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தரப்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், உலகத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உட்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடங்கவிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

நன்றி – ஆதவன்

santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist