மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவினர் அங்கிருந்த யுவதி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
23.02.2021 இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 1.30 மணியளவில் வான் ஒன்றில் சென்ற நால்வர் கொண்ட குழுவினர் வீட்டின் வெளிக்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை தாக்கியுள்ளார். இதனையடுத்து குழுவினர் அவரை திருப்பி தாக்கிவிட்டு உறக்கத்திலிருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் . இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.