மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (31) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் 27 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் படுகாயமடைந்து நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பரகளின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.