மசாஜ் நிலையம் ஒன்றில் சேவையாற்றிய பெண் ஒருவரை, இரு நாட்களாக பிலியந்தலை – கொலமுன்ன பகுதியில் அறை ஒன்றில் அடைத்து வைத்து கொடூரமாக் தாக்கி சித்திரவதை செய்ததாக கூறி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பிலியந்தலை பொலிஸார், அந்த பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று (13) கைது செய்ததாக பொலிஸார் கூறினார். நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, மொரட்டுவ பொலிஸ் நிலையத்திலில் விசேட கடமைக்காக இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களாக நடாத்தப்பட்டுள்ள தாக்குதலில் காயமடைந்துள்ள பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் திருமணமாகதாவர் எனவும், பாதிக்கப்பட்ட பெண் திருமணமானவர் எனவும் தெரிவித்த பொலிஸார், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமான பின்னர், பொலிஸ் கன்ஸ்டபிள் வாடகைக்கு பெற்ற அறையில் தனிமையில் தங்கியிருந்தபோது இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.