தற்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பண்டாரநாயக்கவின் கொள்கையை விற்றுத் தின்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சந்திரிகா, ”கட்சி தற்போது பண்டாரநாயக்கவின் பெயரை விற்று தின்றதே தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. இப்போதுள்ள தலைவர் ஜனாதிபதியாக 5 வருடங்கள் இருந்துள்ளார். ஆனால் அவர் இந்த இடத்திற்கு ஒரு தடவையே வந்துள்ளார்” என்றார்.