
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கந்த ஒருசில தசாப்தங்களில் கரடுமுரடான பாதையில் சென்றுவிட்டன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரின் கதிரை இதுவரையில் ஒரு வருடகாலமாக காலியாக இருந்தது என்பதை விடவும் வேறு எதுவும் உறவுகளின் இலட்சணத்தை பிரகாசமாக வெளிக்காட்டமுடியாது.இந்தியாவு

அதேவேளை மற்றைய நாடுகளுடனான ஒத்துழைப்பு முயற்சிகள் பெருமளவுக்கு பொருளாதார மற்றும் வாணிப ரீதியானவையாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பான இந்தியாவின் விசனத்தை மனதிற்கொண்வையாக அமைந்தன. இந்தியாவுடனான இலங்கையின் ஒத்துழைப்புக்கு இடையில் எந்தவொரு மூன்றாவது நாடும் குறுககே தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் மோடியிடம் கோதாபய கூறினார்.
ஆனால், 2019இக்கு பிறகு எவ்வளவோ காரியங்கள் நந்துமுடிந்து விட்டன.இந்தியாவினதும் இலங்கையினதும் உள்ளக மற்றும் வெளியக சூழ்நிலைகளில் மாத்திரமல்ல,இந்தோ பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் பெருமளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.மாலைதீவையும் பூட்டானையும் தவிர இந்தியாவின் மற்றைய அயல்நாடுகள் சகலதுமே சீனாவின் பேரார்வமிக்க மண்டபமும் பாதையும் செயற்திட்டத்தில் இணைந்துகொண்டு இந்தியாவின் உடனடி அயலகத்தில் சீனாவின் பிரசன்னத்தை உறுதிசெய்தன.
2020மேயில் கிழக்கு லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் சீனத்துருப்புகள் ஊடுருவியதையடுத்து, சீனாவுடனான இந்திய உறவுகள் பல முனைகளில் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு ஒத்துழைப்பில் இருந்து மோதலாக மாறிவிட்டன.கல்வான் பகுதியில் மூண்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.நிலைவரத்தை தணிப்பதற்கு பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னரும் கூட கட்டுப்பாட்டு எல்லையின் இரு பக்கங்களிலும் படைகளின் மட்டங்கள் உயர்வானவையாகவே இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானின் தோழமையுடன் பிராந்தியத்தில் சீனா கூடுதலான அளவுக்கு தன்முனைப்பான பாத்திரத்தை வகிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த நிலைவரம் ஆசியாவின் இரு பெரிய அயல்நாடுகளுக்கும் இடையிலான சஞ்சலமான உறவுகளுக்கு மேலும் சிக்கல்களை சேர்க்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
இந்தோ-பசுபிக்கில் சீனாவின் அதிகரிக்கும் பகைமையுணர்ச்சிக்கு முன்னால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸதிரேலியா ஆகிய நாடுகள் நான்கு தரப்பு கட்டமைப்பின் ஊடாக தங்களது கூட்டுப்பலத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்தன. குவாட் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் நான்கு உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளும் அதிகரிக்கப்பட்டன.உண்மையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதையும் விட இப்போது நெருக்கமானவையாக இருக்கின்றன.

இந்த நகர்வுகளையடுத்து, உலக மூலோபாய அதிகாரத்தின் ஈர்ப்புமையம் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு மாறுகின்றது.இதில் இலங்கை முக்கியமானதாக வெளிக்கிளம்புகின்றது.இலங்கையி
எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பரந்ததாக, ஆழமானதாக, சகலதையும் தழுவியதாக வளரப்போகிறது என்பதை எம்மால் எதிர்பார்க்கமுடியும்.இந்து சமுத்திரத்தில் மூலோபாய நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது தெற்காசிய பிராந்தியத்தில் முன்னரங்க நாடு என்ற வகையில் இலங்கை அதன் தேசிய நலன்களை பேணிக்காப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்கப்போவது சாத்தியம்.
ஜனாதிபதி ராஜபக்ச இந்தியாவுக்கு உறுதிமொழிகளை அளித்தபோதிலும் அவர் தனது நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவை நேசிப்பவராக இருக்கவில்லை.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்துகொண்ட முத்தரப்பு உடன்படிக்கையை ஜனாதிபதி ராஜபக்சவின் கண்காணிப்பின் கீழ் சந்தேகத்துக்கிடமான காரணங்களின் நிமித்தம் இலங்கை கைவிட்டது.
கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் 85 சதவீதமான நிலத்தின் குத்தகையை 99 வருடங்களுக்கு சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனியே வைத்திருக்கும்.இந்த துறைமுக நகரம் கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியதாக அமைகிறது.கொழும்பு துறைமுகத்தின் ஊடாகவே இந்தியாவின் கொள்கலன் போக்குவரத்துகளில் 70 சதவீதமானவை இடம்பெறுகின்றன.
அதனால் இந்தியாவுக்கு மெய்யான கவலைகள் இருக்கின்றன.கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் சீனாவின் பிரசன்னத்தை சட்டபூர்வமானதாக்குகிறது.வாணி

கொவிட் –19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் இறுதியளவில் 4 இலட்சத்தை தாண்டிவிட்டது.தொற்றுநோயினால் முடங்கிப்போன சுற்றுலாத்துறை, வெளிநாட்டு பண அனுப்பீடுகள் மற்றும் ஏற்றுமதி வாணிபம் ஆகியவற்றை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது.
இந்த நிகழ்வுப்போக்குகளை எல்லாம் கவனத்திற்கொள்ளாதவராக ராஜபக்ச, வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தை தூக்கிநிமிர்த்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு நேசமானசமுதாயத்தை தோற்றுவிப்பதற்கும் எனக்கூறிக்கொண்டு மிகவும் கடுமையான சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.சேதனப் பசளை வகைகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இரசாயன பசளை வகைகளின் இறக்குமதியை அவர் தடைசெய்ததுடன் தொலைபேசிகள் மற்றும் வாகனங்களின் இறக்குமதியையும் தடைசெய்தார்.இவையெல்லாம் மக்களின் வாழ்க்கையை கஷ்டத்துக்குள்ளாக்கின.
இலங்கையில் முதலீட்டுச் சூழ்நிலை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அண்மைய அறிக்கையொன்று மிகவும் எதிர்மறையான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறது.
இத்தகைய சிக்கலான ஒரு சூழ்நிலையில்தான் புதுடில்லியில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் என்ற வகையில் 57 வயதான அசோகா மிலிந்த மொரகொடவின் பதவி சவால்மிக்கதொன்றாக போகின்றது.அரசியல் விளக்கப்பாடுயை மொரகொட இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நீதி மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் அமைச்சராகவும் பதவிவகித்தார்.

“இந்தியாவில் இலங்கைக்கான இராஜதந்திர தூதரகங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாயம் 2021/2023 ” என்பதே அந்த செயற்திட்டமாகும். இந்தியாவில் உள்ள மூன்று தூதரகங்களினாலும் பின்பற்றப்படவேண்டிய தெளிவான இலக்குகளை, நோக்குகளை,மூலோபாயங்களை அத்திட்டம் உள்ளடக்கியிருக்கிறது.தற்போதைய இருதரப்பு உறவுகதை மூலோபாய மட்டமொன்றுக்கு உயர்த்துதல், வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி மூலமான சம்பாதிப்பையும் பலப்படுத்துதல்,பாதுகாப்புத்து
குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு இலக்குகள் பேரார்வம் மிக்கவை.சில இலக்குகள் பரஸ்பர உயர்மட்ட விஜயங்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றின் ஊடாக இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல் போன்ற சாதாரணமான இலக்குகளாகும்.வேறு சில இந்தியாவின் மாநிலங்களுடன் பெருமளவுக்கு ஊடாட்டங்களை வளர்த்தல் போன்ற புதுவகையான இலக்குகளாகும்.இவற்றின் மூலமாக இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை, இலங்கையின் கடல்வளத்தை பாதுகாத்தல் (மீனவர்களின் பிரச்சினையைக் குறிக்கிறது ) போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில இலக்குகள் சாதிக்கக்கூடியவை.அதாவது,இரு தரப்பு கூட்டு ஆணைக்குழுக்களை அமைத்தல், கலாசாரம்,கல்வி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கூறலாம்.ஆகாயம், கடல், மின்சாரத்திட்டங்கள் மற்று டிஜிற்றல் தொடர்பு ஆகியவற்றையும் சாதிக்கக்கூடிய இலக்குகளுக்குள் அடக்கலாம்.
மொரகொடவின் இந்த ஆவணம் உள்ளக பயன்பாட்டுக்கானதாக இருந்தாலும்,இலங்கையிலும் இந்தியாவிலும் பத்திரிகைகளுக்கு வழங்கிய பல்வேறு நேர்காணல்களில் அதன் உள்ளடக்கங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.மக்களின் நம்பிக்கைகையை பெறுவதற்காக அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.ஆனால்,சில துரிதமான விளைவுகளைப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து செயற்படும்போதுதான் இவை சாத்தியமாக முடியும்.

உதாரணத்துக்கு, இலங்கை
அதேபோன்று,இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பிலான சிக்கலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டறிய போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.இரு தரப்புக்கும் பயன்தரத்தக்க தீர்வொன்றை அடைவதற்கு பழைய பாணியிலான தீர்வுகளுக்கு அப்பால் செல்வதற்கு அரசியல் விருப்பார்வமும் துணிச்சலும் தேவையாகும்.
சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களுக்கு ஒப்புரவான உரிமைகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை இந்திய அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இலங்கை அந்த பிரச்சினையை அலட்சியம் செய்யமுடியாது.1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை பல குறைபாடுகளைக் கொணடிருக்கின்ற போதிலும், தமிழர்களின் அபிலாசைகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கான தகுதியைக் கொண்டதாக இன்னமும் விளங்குகிறது.

அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியுடன் மாகாணசபைகளை தோற்றுவித்தது.ஈழப்போர் முடிவடைவதற்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13 க்கும் அப்பால் செல்வது குறித்து பேசினார்.எதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதி கோதாபய 13 வது திருத்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவானது.அதை அவர் இரத்துச் செய்யக்கூடும் என்று பலரும் உணருகிறார்கள்.
இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் மொரகொட இந்த பிரச்சினைகளில் சிலவற்றுக்கு தீர்வைக்கண்டு முன்னேற்றத்தைக் காட்டினால், தனது ஆவணத்தில் கூறப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலானவற்றை அயைக்கூடியதாக இருக்கும்.
(இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்த கேணல் ஹரிஹரன் தெற்காசியா மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் நிபுணராவார்.இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்தபோது (1987–1990) இலங்கையில் பணியாற்றியவர்)