கொரோனா தொற்று அபாயம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறுஅமைச்சர் அறிவுறுத்தினார்.