Sunday, May 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இந்தியா

பாம்பை ஏவி மனைவி கொலை செய்த கணவன்

santhanes by santhanes
October 11, 2021
in இந்தியா, முக்கியச்செய்திகள்
Reading Time: 1 min read
0 0
0
பாம்பை ஏவி மனைவி கொலை செய்த கணவன்
0
SHARES
224
VIEWS
FacebookWhatsappTwitterEmail

பாம்பை ஏவி மனைவியை கொலை செய்ததாக  கணவர் சூரஜ் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் சூரஜ் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் ( வயது 27 ) தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்தார். இவரது மனைவி உத்ரா ( வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சூரஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. மார்ச் 2 ம் திகதி, அடூரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் உயிருக்கு பல நாட்கள் போராடினார். ஏப்ரல் 22 அன்று தான் உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவள் பெற்றோருடன் கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் மே 7-ம் திகதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் பிணமாக கிடந்து உள்ளார். உத்ராவின் தந்தை விஜயசேனன் தாய் மணிமேகலா, தங்கள் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  வைத்தியர்கள் உத்ரா விஷ பாம்பு  கடித்து இறந்து விட்டதாக கூறி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, படுக்கையறையில் ஒரு அலமாரியின் கீழ் விஷபாம்பை கண்டனர்.

பாம்பு கொல்லப்பட்டு அவர்களது வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டது.  மே 7 ம் திகதி மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.  பொலிஸார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத்தொடங்கியது.

சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார். பின்னர் பாம்பு பிடிப்பவரான காளுவதிகல் சுரேசை தொடர்பு கொண்டு உள்ளார். தனது தொலைபேசியில் பாம்பு பிடிப்பவர்களின் யூடியூப் வீடியோக்களை தான் பார்த்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டு உள்ளார்.

எவ்வாறாயினும், பாம்பு கடியின் முதல் முயற்சி தோல்வியுற்று உள்ளது. அதில் உத்ரா குணமாகி வந்தார். இதை தொடர்ந்து ​​சூரஜ் மற்றொரு விஷ பாம்பை ரூ .10,000 க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.

இரவு மனைவி தூங்கும் போது, ​​சூரஜ் தான் வைத்திருந்த ஜாடியில் இருந்து நாகத்தை வெளியே எடுத்து பாம்பை மனைவி மீது வீசி உள்ளார். பாம்பு உத்ராவை இரண்டு முறை கடித்து உள்ளது. இதில் உத்ரா மரணமடைந்து உள்ளார்.

அதிகாலையில் உத்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் சூரஜ் எதுவும் நடக்கவில்லை என்பது போல தனது அறையை விட்டு வெளியே வந்து உள்ளார். உத்ராவைக் கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு கொல்லம் ஆறாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை “அரிதிலும் அரிதான வழக்கு” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தண்டனையின் விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது. 

Tags: கொலை
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist