காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இடம்பெற்ற மோதல்களில், ஐந்து இந்தியப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, நேற்று இந்தியப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், இந்திய படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 இந்திய பாதுகாப்பு படையினர் மரணம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்றும், மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
அதேவேளை காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் தீவிரவாதிகளை முற்றுகையிட்டு இந்தியப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.