இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசி ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I – 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35 மணியளவில் இந்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டன.
இந்த தடுப்பூசிகள், சுகாதார அமைச்சின் குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்றுக் காலை இடம்பெற்றது. இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவின் முக்கியத்துவம் தொடர்பை குறிக்கும் வகையில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.