முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் படை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுள்ளார்.
30/01/2021 அன்று குறித்த மலையின் அடிவாரத்தில் பொலிஸார் மற்றும் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த வித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிஸாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு குருந்தூர் மலையை பார்வையிடச் சென்ற பௌத்த துறவிகள் குழு குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.