Saturday, June 3, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home உலகம்

99 வயதில் மருத்துவ சேவைக்கு நிதி திரட்டிய பிரிட்டிஷ் படைவீரர் மரணம்

santhanes by santhanes
February 3, 2021
in உலகம், முக்கியச்செய்திகள்
Reading Time: 2 mins read
0 0
0
99 வயதில்  மருத்துவ சேவைக்கு நிதி திரட்டிய பிரிட்டிஷ் படைவீரர் மரணம்
0
SHARES
36
VIEWS
FacebookWhatsappTwitterEmail
இரண்டாம் உலகப் போரில் படைவீரராக இருந்து ஓய்வு பெற்ற படை வீரரும் கொரோனா பெருந்தொற்று நோய்க் காலத்தில் உலகெங்கும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தவருமான கப்டன் சேர் ரொம் மூர் (Captain Sir Tom Moore) நேற்று உயிரிழந்துள்ளார்.
சில நாட்களாகக் கடும் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் இன்று பெட்போர்ட் (Bedford)  மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிமோனியாவுக்கான மருந்துச் சிகிச்சைகளைப் பெற்று வந்ததன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  தனது நூறாவது பிறந்த நாளுக்கு ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி திரட்டி மருத்துவமனைகளுக்கு வழங்க விரும்பினார் ரொம் மூர். அதற்காக நூறு அடிகள் நடக்க முடிவு செய்தார்.
தனது 99 ஆவது வயதில்- கடந்த ஆண்டு முதலாவது பொது முடக்க காலப் பகுதியில்- தனது வாழ்விடத்தில் பூங்காவைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார்.  நிதி சேர்க்கும் அவரது அந்த நடை முயற்சி உலக அளவில் அவரைப் பிரபலமாக்கியது.

தள்ளாடும் வயதில் பூங்காவைச் சுற்றி அவர் நடக்கின்ற காட்சிகள் உலகெங்கும் வெளியாகின. நிதி நன்கொடைகள் குவிந்தன.  ஆயிரம் பவுண்ட்ஸுகளுக்காக தனியொருவராக அவர் எடுத்துவைத்த நூறு அடிகள் இறுதியில் சுகாதார சேவைகளுக்கு 33மில்லியன் பவுண்ட்ஸ்(£32,794,701) நிதியைத் திரட்டி சாதனை படைத்தது.
நூறாவது பிறந்த நாளன்று அவருக்கு கேணல் தரநிலை வழங்கி பிரிட்டிஷ் அரசு அவரைக் கௌரவித்தது.
இரண்டாவது யுத்த காலப்பகுதியில் இராணுவத்தில் இணைந்த ரொம் மூர்  இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
மூரின் மறைவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அனுதாபம் வெளியிட்டுள்ளார். “நெருக்கடியான கட்டத்தில் நாட்டையும் மக்களையும் ஒன்றுபடுத்திப் பெரும் நம்பிக்கை ஊட்டிய ஒரு ஹீரோ ரொம் மூர்” – என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் டவுணிங் வீதி அலுவலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
Tags: Captain Sir Tom Mooreகப்டன் சேர் ரொம் மூர்பிரித்தானியா
santhanes

santhanes

Recent Posts

  • மன்னாரில் 92 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது
  • இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்பு
  • ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு
  • அதிக விலைக்கு முட்டை விற்பனை: 9 லட்சம் ரூபா அபராதம்
  • லாஃப் எரிவாயு விலை குறைப்பு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist