முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளது.
1983 முதல் 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இவர்களுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இன்று அறிவித்தார்.
சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு ஒரு பரிவர்த்தனை தடை விதிக்கப்படுவதோடு, இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவிற்கு அனுமதிக்க முடியாதவாறு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.